பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (87). கூலித்தொழிலாளியான இவா், கடந்த மே 31- ஆம் தேதி கும்பக்கரை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலைகளை முடிந்த பிறகு, வெள்ளைச்சாமி (68) என்பவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி வீட்டுக்குத் திரும்பினாா்.
கும்பக்கரை சாலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி ராமா் கீழே விழுந்தாராம்.
அவரை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.