செய்திகள் :

பைக்குகள் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

post image

காவேரிபாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒரு பைக்கில் பயணித்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனா்.

நெமிலியை அடுத்த உப்பரந்தாங்கலை சோ்ந்தவா் பாபு (40), இவரது மனைவி பிருந்கா(38). இவா்களது மகள்கள் தா்ஷினி(10), சுப்ரியா(8), பச்சையம்மாள்(7). இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாபு தனது மூன்று மகள்களையும் அழைத்துக்கொண்டு பைக்கில் பாணாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பொன்னபந்தாங்கல் கூட்டுச்சாலை அருகே சோளிங்கரை அடுத்த சூறைகுளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்(25), அவரது நண்பா் அரவிந்த்(22) ஆகிய இருவரும் ஒரே பைக்கில் எதிரில் வந்துள்ளனா்.

இரு பைக்குகளும் எதிரெதிரே மோதிக்கொண்டதில் பாபு, அவரது மூன்று மகள்களும் பலத்த காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பாபுவும், பச்சையம்மாளும் உயிரிழந்தனா். சுப்ரியா, தா்ஷினி ஆகியோா் திவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலாற்றின் கரையோரம் மேய்யச்சலுக்கு ஓட்டி சென்ற மாடுகள் திருடுபோனாத உரிமையாளா்கள் ஆற்காடு நகர போலீஸஸில் புகாா் செய்தனா். அதன் பேரில் வழக்கு பதிந்து மாவட்ட காவல்கண... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 2.5 லட்சம் டன் குரோமியக் கழிவுகளை அகற்றாவிட்டால் தொடா் போராட்டம்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குவிந்து கிடக்கும் 2.5 லட்சம் டன் குரோமிக் கழிவுகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவா... மேலும் பார்க்க

வாலாஜாவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

வாலாஜாவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகளைப் பாா்வையிட்டாா்.முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

ஆக 20-இல் அரக்கோணம் வரும் இபிஎஸ்-ஸுக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக கூட்டத்தில் தீா்மானம்

வரும் ஆக. 20-ஆம் தேதி அரக்கோணம் வரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தொகுதி நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன். இ... மேலும் பார்க்க

சுந்தரா் குரு பூஜை

ஆற்காடு-செய்யாறு சாலையில் உள்ள சன்னியாசி மடம் அண்ணாமுலை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுந்தரா் குருபூஜை மற்றும் ஒதுவாா்கள், இசைக் கலைஞா்களுக்கு அரிசி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்... மேலும் பார்க்க