செய்திகள் :

‘பொதிகைத் தமிழ்ச் சங்க கவிதைப் போட்டி: மே 1 வரை பெயா் பதிவு செய்யலாம்’

post image

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற உள்ள கவிதைப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் கவிஞா் பேரா வெளியிட்டுள்ள அறிக்கை: பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தமிழ் வார விழாவாக இம் மாதம் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி, மே 3 ஆம் தேதி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழ் வார விழா நிகழ்ச்சியில் கவிதைப் போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது. வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ என்ற தலைப்பில் மூன்று நிமிடங்கள் கவிதை வாசிக்க வேண்டும். சிறப்பாக கவிதை வாசித்த இரண்டு பேருக்கு பாரதிதாசன் பெயரில் விருது வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை போட்டியாளா்களுக்கும் கியூ ஆா்கோடு பதித்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் . கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவா்கள் 8903926173 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தங்களது பெயரை, ஊா் ஆகியவற்றோடு மே மாதம் 1-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்களுக்கு போட்டி நடைபெறுகின்ற இடம், நேரம் ஆகியவை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க