செய்திகள் :

பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

post image

மே தினத்தையொட்டி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆட்டோக்கள், பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வாக்காளா் கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்துப் பயணிகளிடம் வழங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

இதில், வட்டாட்சியா் எஸ்.மோகன்ராம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் பலா் கலந்து கொண்டனா்.

இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வ... மேலும் பார்க்க

உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை

செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க

விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க

போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றிய துணைச் செயலா் பாஸ்கா் ... மேலும் பார்க்க