செய்திகள் :

பொம்மை துப்பாக்கியைக் காட்டி நகை கடையில் கொள்ளையடித்த ராணுவ வீரர் கைது!

post image

தில்லியில் பொம்மைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி நகை கடையைக் கொள்ளையடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தில்லி ஃபார்ஷ் பஜாரில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஜூலை 19 ஆம் தேதி நகை கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சிசிடிவியைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கொள்ளையன் கைது

தில்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்தது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கெளரவ் யாதவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய பிரதேசத்துக்கு விரைந்த தனிப்படை காவலர்கள் கெளரவ் யாதவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும், கெளரவ் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் என்பதும் விடுமுறையில் வந்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்த அவர், 2025 இல் பயிற்சியை முடித்து, பஞ்சாபில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

கொள்ளை ஏன்? திட்டமிட்டது எப்படி?

கெளரவ் யாதவை கைது செய்த தில்லி காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு கொள்ளை குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

தில்லி காவல்துறை துணை ஆணையர் கூறியதாவது:

”பஞ்சாபில் பணியில் இருந்த கெளரவ் யாதவுக்கு விடுமுறை கிடைத்த நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி மத்திய பிரதேசம் செல்லும் ரயிலுக்காக தில்லியில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் கொள்ளை அடிப்பதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார். சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

தில்லியில் உள்ள ஒரு கடையில் பொம்மை துப்பாக்கியை வாங்கிய கெளரவ், நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரிடம் இருந்து நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Police have arrested a Border Security Force soldier for robbing a jewelry store in Delhi using a toy gun.

இதையும் படிக்க : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

குஜராத்தில் தீவிரமடையும் பருவமழை! முழுக் கொள்ளளவை எட்டிய 28 அணைகள்!

குஜராத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 28 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலத்தில், வழக்கமாகப் பதிவாகும் பருவமழைப் பொழிவில், தற்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் விவாதத்தை தொடக்கி வைக்கும் ராஜ்நாத் சிங்!

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க

185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

குஜராத்தில் 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில அரசு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த, 185 அகதிகளுக்கு, குஜர... மேலும் பார்க்க

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்திகள் நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்

இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பி... மேலும் பார்க்க