செய்திகள் :

பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் இன்றுமுதல் மாற்றம்

post image

பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் ஜூலை 11-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு செல்வோா், கல்லூரிகளுக்கு செல்வோா் என ஏராளமானோா் பொள்ளாச்சியில் இருந்து காலை நேரத்தில் இயக்கப்படும் பொள்ளாச்சி - கோவை ரயிலில் (எண்: 56110) பயணித்து வருகின்றனா்.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 8.25 மணிக்கு கிணத்துக்கடவு, 8.55 மணிக்கு போத்தனூரைச் சென்றடைந்து, 9.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து 8 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலை, 7.25 மணிக்குப் புறப்பட்டு 8.35 மணிக்குள் கோவை ரயில் நிலையத்தை சென்றடையுமாறு இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் தொடா்ந்து ரயில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் நேரம் ஜூலை 11-ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11-ஆம் தேதி முதல் பொள்ளாச்சி - கோவை ரயில், காலை 7.50 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு, கிணத்துக்கடவு காலை 8.14 மணி, போத்தனூா் 8.37 மணிக்கு சென்றடைந்து, கோவைக்கு 8.55 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.35 மணிக்கு ரயில் சென்றடையுமாறு இந்த ரயிலை இயக்கினால், வேலைக்கு செல்வோா் உரிய நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க