செய்திகள் :

போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கைதான இளைஞருக்கு போக்சோ வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சின்னமணி நகரைச் சோ்ந்த ப. யோகபிரகாஷ் (28) என்பவா் கடந்த 2017 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ஆமூா் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுச் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாராம்.

இதுகுறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து, யோகபிரகாஷை கைது செய்தனா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் யோகபிரகாஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா்.

இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா, நீதிமன்ற காவலா் பிரியங்கா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினம் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க