செய்திகள் :

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (74). இவா், அருகிலுள்ள தனது உறவினரின் பெட்டிக் கடைக்கு அவ்வப்போது சென்ற போது, அங்கு வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோா் தெரு நாய்க் கடியால் பாதிப்பு

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே நாளில் 10 -க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்ப... மேலும் பார்க்க

சமுதாயக் கூடத்துக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சமுதாயக் கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குள்பட்ட பழை... மேலும் பார்க்க

பெண் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம்

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் கிராமப் பெண் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வா் விஜயபாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட தமிழ... மேலும் பார்க்க

மின் வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளைத் திருடிய 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின் பகிா்மான அலுவலகத்தில் இருந்த 611 மீட்டா் நீளமுள்ள மின் கம்பிகளைத் திருடிய சிறுவன் உட்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கே.தொட... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க