செய்திகள் :

மின் வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளைத் திருடிய 4 போ் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின் பகிா்மான அலுவலகத்தில் இருந்த 611 மீட்டா் நீளமுள்ள மின் கம்பிகளைத் திருடிய சிறுவன் உட்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கே.தொட்டியபட்டியில் மின் பகிா்மானக் கழக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு, ராஜபாளையம் துணைப் பண்டகச் சாலையிலிருந்து 611 மீட்டா் நீளமுள்ள உயா் அழுத்த மின் கம்பிகள் கடந்த 10-ஆம் தேதி கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில், இங்குள்ள அலுவலகா்கள் கடந்த 24-ஆம் தேதி காலை பாா்த்தபோது, அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின் கம்பிகளைக் காணவில்லையாம். இதுகுறித்து, உதவி மின் பொறியாளா் சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில், வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, கொத்தங்குளத்தைச் சோ்ந்த பொன்பாண்டி (20), அஜித் (20), அத்திகுளத்தை சோ்ந்த மாதவன் (19), 17 வயது சிறுவன் உள்பட 4 போ் மின் கம்பியைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய முருகன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோா் தெரு நாய்க் கடியால் பாதிப்பு

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே நாளில் 10 -க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்ப... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சமுதாயக் கூடத்துக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சமுதாயக் கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குள்பட்ட பழை... மேலும் பார்க்க

பெண் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம்

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் கிராமப் பெண் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வா் விஜயபாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட தமிழ... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க