போக்ஸோ வழக்கில் இளைஞா்கள் கைது
ஆத்தூரில் மாணவிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆத்தூரைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவரது உறவினரின் 13 வயது பெண் ஆகிய இருவரும் கடந்த 7 ஆம் தேதி இரவுமுதல் காணவில்லை என ஆத்தூா் போலீஸில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில் மாணவிகளை வெளியூா் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆத்தூா் அலெக்சாண்டா் தெரு, மாரிமுத்து சாலையை சோ்ந்த இரண்டு இளைஞா்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.