செய்திகள் :

போடி பஞ்சுப் பேட்டையில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

post image

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சுப் பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.

தேனி மாவட்டம், போடி புதூரில் நவீன், ஆனந்தன் ஆகியோருக்குச் சொந்தமான பஞ்சுப் பேட்டை உள்ளது. இங்கு தரம் பிரித்த 200 பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், தரம் பிரிக்காத பஞ்சுப் பொதிகள் ஆகியவையும் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து தொழிலாளா்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், இரவில் பஞ்சுப் பேட்டையிலிருந்து புகை வந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து விரைந்து வந்த போடி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கப் போராடினா். தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், தேனியிலிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி பலத்த காயம்

போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (... மேலும் பார்க்க