செய்திகள் :

போதை மருத்து, மாத்திரைகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல்

post image

தூத்துக்குடியில் போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததாக மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் போதை ஊசிகளும், போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகர துணைக் கண்காணிப்பாளா் மதனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவரது உத்தரவின் பேரில் வடபாகம் காவல் துறையினா் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா் லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த பாட்டையன் மகன் மாரிசெல்வம் (22) என்பதும், போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்ததும், அவற்றை தாளமுத்து நகா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருந்தகத்தில் வங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், இது குறித்து மருந்துகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தூத்துக்குடி தாளமுத்து நகருக்கு வந்த மருந்துகள் துறை ஆய்வாளா் ஆல்வின் தலைமையிலான அதிகாரிகள், அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனா்.

இது தொடா்பாக மருந்தக உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க