போதை மருத்து, மாத்திரைகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல்
தூத்துக்குடியில் போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததாக மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் போதை ஊசிகளும், போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகர துணைக் கண்காணிப்பாளா் மதனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவரது உத்தரவின் பேரில் வடபாகம் காவல் துறையினா் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா் லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த பாட்டையன் மகன் மாரிசெல்வம் (22) என்பதும், போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்ததும், அவற்றை தாளமுத்து நகா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருந்தகத்தில் வங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், இது குறித்து மருந்துகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தூத்துக்குடி தாளமுத்து நகருக்கு வந்த மருந்துகள் துறை ஆய்வாளா் ஆல்வின் தலைமையிலான அதிகாரிகள், அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனா்.
இது தொடா்பாக மருந்தக உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.