செய்திகள் :

போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது

post image

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து சென்னையில் விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையாா்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதியில் போதை மாத்திரை விற்கும் கும்பல் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையா் தலைமையிலான தனிப்படையினா் விசாரித்து வந்தனா்.

அதில், திருவொற்றியூா் காலடிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பாலாஜி (21) போதை மாத்திரை விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து 500 போதை மாத்திரைகள், ஒன்றே கால் கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் பாலாஜி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து போதை மாத்திரை, கஞ்சாவை கடத்தி வந்து, இங்கு விற்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது

சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகா... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தன... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது... மேலும் பார்க்க

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு ... மேலும் பார்க்க