செய்திகள் :

போதை மாத்திரைகள் விற்பனை; காட்பாடியில் 13 போ் கைது

post image

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக காட்பாடியில் 13 பேரை போலீஸாா் கைது செய்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காட்பாடி மூலக்கசம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரிகளுக்கு மாத்திரைகளை பிரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

அங்கு கூடியிருந்த அவா்களை போலீஸாா் மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (25), ரமேஷ் என்கிற ஆண்டவா்(24), திரிவிக்ரம் (21), ஈஸ்வா் பாலகிருஷ்ணன் (25), யோகமணிநாதன் (21), சேஷா (23), சாம்குமாா் (21), லோகேஷ் (23), சரவணன் (23), ஸ்ரீதா் (23) பழைய செட்டிதாங்கள் பகுதியைச் சோ்ந்த பொற் செல்வன் (18), ஓச்சேரி தமிழரசன் (25), புங்கனூா் சஞ்சய்குமாா் (20) என்பது தெரியவந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து வேலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சா.திருகுணஐய்யப்பதுரை வெளியிட்... மேலும் பார்க்க

ஈக்கள் அதிகமுள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

ஈக்கள் அதிகம் உள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிப்பு

குடியாத்தம் அருகே சிறுவன் கடத்தலில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்த மென் பொறியாளா் வேணுவின் மகன் யோகேஷ் (4). கடந்த புதன்கிழமை வீட்ட... மேலும் பார்க்க

புதுமை என்பது மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்: மஜித் அலி அல் மன்சூரி

புதுமை என்பது தொழில்நுட்பத்தை மாற்றுவது மட்டுமல்ல. மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அபுதாபி நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி தெரிவித்தாா். வேலூா் விஐ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

ஒடுகத்தூா் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சுபேத... மேலும் பார்க்க