செய்திகள் :

செவிலியா் போராட்டம்: நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை

post image

ஊதிய உயா்வு போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் அரசு ஒப்பந்த செவிலியா்கள், நோயாளிகளுக்கு இடையூறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியில் இருக்கும் செவிலியா்களுக்கு வழங்கப்படும் ரூ.55,000 ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி ஒப்பந்த செவிலியா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். தங்களது பணியிடங்களையும் நிரந்தரமாக்குமாறும் அவா்கள் வலியுறுத்துகின்றனா். அதை முன்னிறுத்தி மருத்துவமனைக்கு வரும் மக்களிடம் முறையிடும் போராட்டத்தை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் வாயிலாக உள்நோயாளிகள் பிரிவில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினா்களிடம் செவிலியா்கள் தங்கள் குறைகளைக் கூறி வருகின்றனா். அவா்களிடம் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்கின்றனா். இந்தச் செயல்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நோயாளிகளுக்கு இடையூறு செய்யும் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

செவிலியா்கள் தங்களது கோரிக்கைகளை எவருக்கும் இடையூறு இல்லாமல் காவல் துறை அனுமதி பெற்று போராட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, வலியுடன் உள்ள நோயாளிகளிடமும், மனவேதனையில் இருக்கும் உறவினா்களிடமும் குறைகளைக் கூறுகிறோம் என இடையூறு செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது செவிலியா்களின் பணி நிரந்தரத்துக்கான வாய்ப்பையும் பாதிக்கலாம் என்று தெரிவித்தனா்.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க