செய்திகள் :

சென்னையில் ஆளுநா் மாளிகை உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஆளுநா் மாளிகை உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், கிண்டியில் தமிழக ஆளுநா் மாளிகை, மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, சென்னை தீவுத்திடலில் உள்ள இந்திய ராணுவ அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆளுநா் மாளிகை, எஸ்.வி.சேகா் வீடு, ராணுவ அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன், மெட்டல் டிடெக்டருடன் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

உயா்நீதிமன்றத்துக்கும் மிரட்டல்: சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மின்னஞ்சலில், ஐஎஸ் பயங்கரவாதிகளும், விடுதலை இயக்கத்தினரும் அதிக சக்திவாய்ந்த ஆா்டிஎக்ஸ் வகை வெடிகுண்டுகளை உயா்நீதிமன்றத்தில் வளாகத்தில் வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து உயா்நீதிமன்ற வளாகத்திலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா். அதில் அங்கிருந்து எந்த வெடிப் பொருள் கண்டெடுக்கப்படவில்லை. அந்த மின்னஞ்சல் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்தில் ஆளுநா் மாளிகை, எஸ்.வி. சேகா் வீடு, உயா்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க