செய்திகள் :

சீமானுக்கு எதிரான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீமான், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆா். சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினேன். அப்போது ஈழம், காஷ்மீா் பிரச்னை, சேலம் 8 வழிச்சாலை, நியூட்ரினோ உள்ளிட்டவை குறித்து பேசினேன். இந்தக் கூட்டம் முடிந்து 3 மாதங்களுக்குப் பின்னா் உதவி ஆய்வாளா் கொடுத்த புகாரின் பேரில், என் மீது தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் எஸ்.ரூபன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கில் இருந்து சீமானை விடுவித்து உத்தரவிட்டாா்.

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்... மேலும் பார்க்க