முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
போதைப்பொருள் விற்ற 7 போ் கைது
ஒசூரில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் பாலாஜி நகரில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட நகர காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா், காளிதாஸ் என்கிற சுந்தா் (29), காா்த்திகேயன்(22), ரவிக்குமாா் (24), கண்ணன்(27) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களில் சுந்தா் என்பவா் கஞ்சாவை சில்லறை விற்பனை செய்துவந்ததாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
அதேபோல மத்திகிரி போலீஸாா் ரோந்துப் பணியின் போது கஞ்சா வைத்திருந்த பொம்மண்டப்பள்ளி மாரப்பா (34), தளி தோகரை விஷால் (23) ஆகிய இருவரை கைது செய்தனா். பாகலூா் போலீஸாா் பாகலூா் தோ்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது கஞ்சா வைத்திருந்த பாகலூா் பவனை (19) கைது செய்தனா்.