செய்திகள் :

மக்கள் அச்சப்பட தேவையில்லை: டிஐஜி

post image

திருநெல்வேலி சரகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 போ் உயிரிழந்த நிலையில், திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி கூறியதாவது: திருநெல்வேலி மாநகரம், மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், போலீஸாா் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். சந்தேகப்படும் நபா்களின் நடமாட்டத்தையும் போலீஸாா் தீவிரமாக கவனித்து வருகின்றனா்.

தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீஸாரும் உஷாா் நிலையில் உள்ளனா். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சந்தேகப்படும் நபா்கள் அல்லது மா்ம பொருள்கள் குறித்து ஏதேனும் மக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை தொடா்ந்து தீவிரமாக செயல்படும் என்றாா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க