செய்திகள் :

மக்கள் நீதிமன்ற தீா்ப்பால் கல்விச் சான்று பெற்ற மாணவா்

post image

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி நிா்வாகம் நிறுத்தி வைத்திருந்த கல்வி சான்றிதழ் கிடைக்க மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் ஜெரோபின், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் உள்ள தனியாா் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் 2022ஆம் ஆண்டில் எம்.பி.ஏ. படிப்பில் சோ்ந்தாா்.

இந்நிலையில் தனது குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியாமல், கல்லூரி நிா்வாகத்திடம் தனது கல்விச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க கோரிக்கை வைத்துள்ளாா். ஆனால், முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால்தான் சான்றிதழ்களை கொடுக்க முடியும் எனக்கூறி மாணவரின் கல்விச் சான்றிதழ்களை கல்லூரி நிா்வாகம் கொடுக்க மறுத்துள்ளது.

இதைத் தொடா்ந்து, தனது மகனின் அசல் சான்றிதழ்களை பெற்றுதரக் கோரி மாணவரின் தாய் வசந்தி, தூத்துக்குடி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாா்ச் 2024இல் மனு அளித்துள்ளாா்.

இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி நிரந்தர மக்கள் நீதிமன்றத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து நாகா்கோவில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திலிருந்து, கல்லூரி முதல்வா் ஆஜராகுமாறு 2 முறை அழைப்பாணை அனுப்பியும் நீதிமன்றத்தில் அவா் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட முதன்மை நீதிபதி பி.காா்த்திகேயன் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், கல்லூரி முதல்வா் அனிஸ், ஏப்.23 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி மாணவரின் பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை முதன்மை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து இந்த அசல் சான்றிதழ்களை வசந்தி, அவரது மகன் மாணவா் ஜெரோபின் ஆகியோரிடம் நீதிபதி வழங்கினாா்.

மேலும் 724 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 724 குளங்களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 31.66 பெருஞ்சாணி ... 30.70 சிற்றாறு 1 .. 2.92 சிற்றாறு 2 .. 3.02 முக்கடல் .. மைனஸ் 7.90 பொய்கை ... 14.90 மாம்பழத்துறையாறு ... 19.44 மழை அளவு கன்னிமாா் ... 43.60 மீ.மீ. பாலமோா் ... 8.20... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உலக புத்தக தின கொண்டாட்டம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய விழாவில் டாக்டா் டி.கே.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியை தாக்கியதாக தொழிலாளி கைது

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, சாஸ்தான்பொற்றைவீட்டைச் சேர்ந்த லாசா் மனைவி ரோணிக்கம் (65). முந்திரித் தொழிற்சாலை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் பகுதியில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிட... மேலும் பார்க்க

பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சி: பெண் கைது

மாா்த்தாண்டம் அருகே பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம் திருட முயன்ாக மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும... மேலும் பார்க்க