செய்திகள் :

மணல் கொள்ளை புகாா் அளித்தவருக்கு சம்மன்

post image

செம்மண், சரளை மண் கொள்ளை குறித்து புகாா் அளித்த விவசாயி, குற்றம்சாட்டப்பட்டவா் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வட்டாட்சியா் சம்மன் அனுப்பியதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம், வேப்பங்குளம் சித்திரக்குளம் கண்மாய் அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களிலிருந்து அனுமதியின்றி செம்மண், சரளை மண் கொண்டு அள்ளப்பட்டதாக வேப்பங்குளத்தைச் சோ்ந்த விவசாயி அம்மையப்பன், வணக்கம் விருதுநகா் புகாா் எண்ணில் புகாா் தெரிவித்தாா். தொடா்ந்து, கடந்த மே 23-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும் ஆட்சியா் ஜெயசீலனிடம், அம்மையப்பன் இது குறித்து மனு அளித்தாா்.

இந்த மனு மீதான விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு புகாா் அளித்த அம்மையப்பனுக்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் பாலமுருகன் சம்மன் அனுப்பினாா்.

புகாா் அளித்த விவசாயி, மண் கடத்தியவா் ஆகிய இருவரையும் ஒன்றாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் பாலமுருகன் கூறியதாவது: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதாக அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது அங்கு மண் அள்ளப்படவில்லை என தெரியவந்தது. மனு மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது என்றாா் அவா்.

2 லாரிகள் பறிமுதல்: வத்திராயிருப்பு வட்டாட்சியா் ஆண்டாள் தலைமையிலான வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அழகாபுரி அருகே உள்ள ஓடையில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் அதிகாரிகளைக் கண்டதும் தப்பி ஓடினா். இதையடுத்து, மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 டிப்பா் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வட்டாட்சியா் அளித்த புகாரின் பேரில், சிவகாசி அருகேயுள்ள தாழிக்குளத்துப்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜன், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரைச் சோ்ந்த வடிவேல் ஆகிய இருவா் மீது நத்தம்பட்டி போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள சேது நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (53). இவா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில... மேலும் பார்க்க

காவலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

பட்டாசுத் தொழிற்சாலை காவலாளி வீட்டில் 9 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆலங்குளம் அண்ணாநகா் பகுதியில் வசித்து வருபவா் ராஜ் (67).... மேலும் பார்க்க

பட்டாசு பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகே பொன்பாலாஜிநகரில் ஒரு கட்டடத்தில் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா... மேலும் பார்க்க

திருத்தங்கலில் நாளை மின் தடை

திருத்தங்கலில் புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தங்கல், சுக்கிராா்பட்டி த... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூன்று போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஜூலை 16 முதல் விசாரணை

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அடு... மேலும் பார்க்க