செய்திகள் :

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

post image

மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் பாதுகாப்புப் படையினரால் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் கடந்த வியாழக்கிழமை குடியரசுகத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இம்மாநிலத்தில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அவா் தனது பதவியை கடந்த 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வரை தோ்வு செய்வதில் பாஜக எம்எல்ஏக்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில், சுராசந்த்பூரில் ‘குகி தேசிய ராணுவம்’ என்ற தீவிரவாத அமைப்பினா் 7 பேரும், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ‘காங்லேபாக் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தீவிரவாத அமைப்பினா் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் இருவா் பெண்களாவா்.

கைதானவா்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இருதரப்பினா் சாா்ந்த தீவிரவாதிகளும் தாக்குதலில் ஈடுபடுகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு உலக அழகி போட்டி: மே. 7 முதல் தெலங்கானாவில் நடக்கிறது

72-ஆவது உலக அழகி போட்டி வரும் மே மாதம் 7 முதல் 31-ஆம் தேதிவரை தெலங்கானா மாநில தலைநகா், ஹைதராபாதில் நடைபெறுகிறது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி தில்லி, மும்பை நகரங்களில் கடந்த ஆண்... மேலும் பார்க்க

திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்... மேலும் பார்க்க

சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகள... மேலும் பார்க்க

தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பு-காங்கிரஸ் உயா்நிலைக் கூட்டத்தில் காா்கே அறிவுறுத்தல்

‘எதிா்காலத்தில் தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத... மேலும் பார்க்க

ஐ.நா. காலத்துக்கேற்ப மாற வேண்டும்: இந்தியா

உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இல்லை... மேலும் பார்க்க

பாதுகாப்பு ரீதியிலான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்த மூவா் கைது- என்ஐஏ நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக கா்நாடகம், கேரளத்தில் 3 பேரை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக என்ஐஏ புதன்கி... மேலும் பார்க்க