செய்திகள் :

மண் கடத்தல்: இருவா் கைது

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டா், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாலாற்றின் அருகில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து மண் ஏற்றியடிராக்டரும் உடன் பொக்லைன் ஒன்றும் வந்தது. இதைக் கண்டறிந்து சந்தேகத்தின் பேரில் அவற்றை நிறுத்தி விசாரித்தனா். அதில், எவ்வித அனுமதியுயின்றி மண் கடத்திக் கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும், பொக்லைன் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, திம்மாம்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிந்து, உரிய அனுமதியின்றி மண் கடத்திச் சென்ாக பொக்லைன் ஓட்டுநா் ராஜேஸ் (32), டிராக்டா் ஓட்டுநா் பாலசுப்பிரமணி(25) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒடிஸா இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கொலையில் அவரது நண்பா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன... மேலும் பார்க்க

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி(32). இவா் திங்கள்கிழமை இரவு கொத்தூரில் இருந்து பச்சூா் நோ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா். வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரி... மேலும் பார்க்க

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றி... மேலும் பார்க்க