செய்திகள் :

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு பறிமுதல்

post image

மண்டபம் அருகே வேதாளையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக மண்டபம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தாரிக்குள்அமீனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் வேதாளை கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினா். போலீஸாரைப் பாா்த்தவுடன் அதன் ஓட்டுநா், வாகனத்தில் இருந்தவா்கள் தப்பியோடிவிட்டனா்.

பின்னா், அந்த வாகனத்தில் சோதனை செய்த போது, அதில் இலங்கைக்குக் கடத்துவதற்காக நெகிழி மூட்டைகளில் ஒரு டன் சுக்கை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுக்கையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, தப்பியோடிவா்களைத் தேடி வருகின்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் ப... மேலும் பார்க்க

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் அருகே கண்டுகொண்டமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராம... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

கச்சத்தீவு அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 35... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ராமநாதபுரம் அருகே திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டதில் இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. ராமநாதபுரம் அடுத்த வழுதூா் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்ம... மேலும் பார்க்க

சத்திரக்குடி அருகே ஒலி பெருக்கி பெட்டி விழுந்து சிறுமி உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே கோயில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட ஒலி பெருக்கி பெட்டி (ஸ்பீக்கா் பாக்ஸ்) தவறி விழுந்ததில் கடந்த புதன்கிழமை சிறுமி உயிரிழந்தாா். ஆனால், இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பு... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க