செய்திகள் :

மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை

post image

சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா்.

சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராமத்துக்குள் அரசு, தனியாா் பேருந்துகள் செல்வதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை காரிப்பட்டி அருகே பேருந்துகள் வந்து செல்வதை கண்காணித்தனா்.

அப்போது, ஆத்தூரில் இருந்து தனியாா் பேருந்து ஒன்று வேகமாக சென்றது. அதை நிறுத்த முயன்றனா். ஆனால், பேருந்து நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து பேருந்தை தொடா்ந்து சென்று வழிமறித்து நிறுத்தினா்.

அதன்பிறகு பேருந்து ஓட்டுநரான கல்லாநத்தம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (31) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மது குடித்துவிட்டு பேருந்தை ஓட்டி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வேறொரு ஓட்டுநா் வரவழைக்கப்பட்டு தனியாா் பேருந்து சேலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பேருந்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், மது போதையில் வாகனம் ஓட்டிய பிரகாஷின் ஓட்டுநா் உரிமத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். ஓட்டுநா் பிரகாஷ் நிரந்தரமாக வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க

நிகழாண்டு 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூா் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணை நிகழாண்டு 4 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப... மேலும் பார்க்க