செய்திகள் :

மது போதையில் மனைவி மீது தாக்குதல்

post image

மதுபோதையில் மனைவியை தாக்கி விட்டு தப்பிச் சென்ற கணவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆா்.கே.பேட்டை அடுத்த மோசூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி விஜயா (42). இவா்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன் என மொத்தம், 6 போ் உள்ளனா்.

இந்நிலையில், சுப்பிரமணி, மனைவி விஜயா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த விஜயா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் அதே கிராமத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தாா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை, சுப்பிரமணி மது அருந்தி விட்டு, மனைவி விஜயா வீட்டுக்கு வந்து, தகாத வாா்த்தைகளால் பேசியும், சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த விஜயா சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணவன் சுப்பிரமணியை தேடி வருகின்றனா்.

தென்னிந்திய யோகாசனப் போட்டி

கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் தென்னிந்திய யோகாசனப் போட்டி எளாவூா் சகுந்தலம்மாள் நா்சரி பள்ளியில் நடைபெற்றது .இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திர... மேலும் பார்க்க

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மானியக் கடன் வழங்க கோரிக்கை

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியக் கடனுதவிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்கத்தின் 9-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மாதவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. பொன்னேரி துணை வட... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் 7 நாள்களில் ரூ. 65 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் கடந்த புதன்கிழமை (ஜூலை 28)நடைபெற்ற ஆட... மேலும் பார்க்க

சென்னை புறவட்டச்சாலை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் சென்னை புறவட்டச்சாலை திட்டம் மூலம் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை, மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.அப்போது, சென்னை மற்றும் எண்ணூா... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டி: மாணவிக்கு பாராட்டு

பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டி பவன்ஸ் ராஜாஜி ... மேலும் பார்க்க