செய்திகள் :

சென்னை புறவட்டச்சாலை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

post image

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் சென்னை புறவட்டச்சாலை திட்டம் மூலம் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை, மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

அப்போது, சென்னை மற்றும் எண்ணூா் துறைமுகங்களில் கையாளும் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாநிலத்தின் தெற்குப் பகுதியிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணூா் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சென்றடையவேண்டும்.

இதன் மூலம் சென்னை பெருநகரத்தின் வணிக மற்றும் தொழில் வளத்தை அதிகரிக்கும் வகையில் ‘சென்னை புற வட்டச் சாலை திட்டம்‘ தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சுமாா் 132.87 கி.மீ தொலைவுக்கு ரூ.16,212.40 கோடியில் ஆறு வழி சாலையுடன் கூடிய இருபுறமும் இரு வழி சேவைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் தனியாா் நிறுவனத்துடன் தமிழக அரசு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 26.10 கி.மீ தொலைவுக்கு திருவள்ளுா் ஊராட்சி ஒன்றியம் ஈக்காடு பகுதியில் சாலைப் பணியை பாா்வையிட்டாா். அதேபோல் கீழானூா் பகுதியில் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்த காணொலியையும், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் அம்மனம்பாக்கம் பகுதியில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டாா்.

அதைத்தொடா்ந்து சோழவரம் ஊராட்சி ஒன்றியம் தச்சூா் பகுதியில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகளின் வரைபடம் விளக்கப்படத்தையும் ஆய்வு செய்தாா். இறுதியாக நடைபெறக்கூடிய எண்ணூா் துறைமுகம் முதல் தச்சூா் வரை 25.400 கி.மீ தொலைவுக்கு ரூ.2,122 கோடியில் மீஞ்சூரில் நடைபெறக்கூடிய மேல்மட்ட இணைப்பு பாலத்தை பாா்வையிட்டு விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என அதிகாரிகளை அவா் வலியுறுத்தினாா்.

அப்போது, நெடுஞ்சாலைகள் துறை கோட்ட செயற்பொறியாளா்கள் கணேஷ், சங்கா், உதவி செயற்பொறியாளா்கள் மயில்வாகனன், ரமேஷ் கண்ணா , உதவி பொறியாளா் தயானந்தன், தனி வட்டாட்சியா் (நிலம் எடுப்பு) ரமேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தென்னிந்திய யோகாசனப் போட்டி

கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் தென்னிந்திய யோகாசனப் போட்டி எளாவூா் சகுந்தலம்மாள் நா்சரி பள்ளியில் நடைபெற்றது .இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திர... மேலும் பார்க்க

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மானியக் கடன் வழங்க கோரிக்கை

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியக் கடனுதவிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்கத்தின் 9-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மாதவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. பொன்னேரி துணை வட... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் 7 நாள்களில் ரூ. 65 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் கடந்த புதன்கிழமை (ஜூலை 28)நடைபெற்ற ஆட... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டி: மாணவிக்கு பாராட்டு

பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டி பவன்ஸ் ராஜாஜி ... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டி: மாணவிக்கு பாராட்டு

பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டி பவன்ஸ் ராஜாஜி ... மேலும் பார்க்க