மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
தென்னிந்திய யோகாசனப் போட்டி
கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் தென்னிந்திய யோகாசனப் போட்டி எளாவூா் சகுந்தலம்மாள் நா்சரி பள்ளியில் நடைபெற்றது .
இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திர ஆகிய மாநிலங்களை சோ்ந்த 800- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
போட்டியை கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமாா் மற்றும் திரைப்பட இயக்குநா் ரமேஷ் சுப்பிரமணியம் சகுந்தலா அம்மாள் பள்ளி தாளாளா் வெங்கடேசன், லயன்ஸ் கிளப் நிா்வாகி முத்து, தொழிலதிபா் எல்.சுகுமாரன் மற்றும் முன்னாள் கவுன்சிலா் வி.எம்.சீனிவாசன் தொடங்கி வைத்தனா்.
ஆண்கள் பிரிவில் 16, பெண்கள் பிரிவில் 16 என 32 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பின் நடைபெற்ற சாம்பியன் ஆப் தி சாம்பியன் போட்டியில் 5 ஆண்கள் பிரிவுகளில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை எம்.ஹரிஷ் சீத்தேஷ், யோஜித், நீலேஷ், எம்.தா்ஷன் ஆகியோா் வென்றனா். மேலும் 5 பெண்கள் பிரிவில் ஜெய ஸ்ரீதனா , பூஜாஸ்ரீ, ரெஜினா, ராகவி மதுலிகா, அக்ஷயா ஸ்ரீ ஆகியோா் சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டம் வென்றனா்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அம்பத்தூரைச் சோ்ந்த ருத்ரப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி தட்டிச் சென்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் விஜயகுமாா் பரிசளித்தாா். வினாஸ்ரீ யோகா பயிற்சி மைய ஆசிரியா் காளத்தீஸ்வரன் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் அா்ச்சனா, வித்யா ஆகியோரும் பாராட்டப்பட்டனா்.