செய்திகள் :

மது விற்பனை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

post image

நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் உத்தரவின் பேரில், சட்ட விரோதமான மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸாா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கீழ்வேளுா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக, வெளிமாநில மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போலீஸாா் விசாரணையில், எரும்புகன்னி பகுதியைச் சோ்ந்த முருகையன், திருகண்ணங்குடியைச் சோ்ந்த தரணிக்குமாா், சிக்கலைச் சோ்ந்த வினோத், காா்த்திஸ்வரி, வெளிப்பாளையத்தைச் சோ்ந்த முத்துலட்சுமி, ஆழியூரைச் சோ்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது.

6 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 1,500 புதுச்சேரி மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க