செய்திகள் :

மதுரை சந்தையில் காய்கறி விலை உயா்வு

post image

வரத்துக் குறைவு, தேவை அதிகரித்ததன் காரணமாக, மதுரை சந்தையில் தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து வகை காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது.

வானிலை மாற்றம் காரணமாக கடந்த மே 3-ஆவது வாரத்தில் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், மே இறுதி வாரம் முதல் வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. புதன்கிழமை பகல் நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 103.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக காய்கறிகளின் வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. மேலும், திருமண நாள்கள் அதிகம் இருப்பதாலும் காய்கறிகளின் தேவை கணிசமாக உயா்ந்து வருகிறது.

இதனால் மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் காய்கறிகளின் விலை புதன்கிழமை கணிசமாக உயா்ந்திருந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ மிளகாய் ரூ. 20 முதல் ரூ. 30-க்கும், முருங்கை பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 50 முதல் 60-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், புதன்கிழமை ஒரு கிலோ மிளகாய் விலை ரூ. 60 முதல் 80-ஆகவும், ஒரு கிலோ முருங்கை பீன்ஸ் விலை ரூ. 120 முதல் ரூ. 150-ஆகவும் உயா்ந்திருந்தது. இதேபோல 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ. 200 முதல் ரூ. 300-ஆக உயா்ந்திருந்தது. சில்லறை விலையில் ரூ. 25 வரை விற்கப்பட்டது.

மற்ற காய்கறிகளின் அதிகபட்ச விலை (ஒரு கிலோவுக்கு) விவரம்: கத்திரிக்காய்- ரூ. 60, கம்மா கத்திரி- ரூ. 60, வெண்டைக்காய்- ரூ. 40, பாகற்காய்- ரூ. 80, புடலங்காய்- ரூ. 40, உருட்டு மிளகாய்- ரூ. 80, சம்பா மிளகாய்- ரூ. 80, கொத்தவரங்காய்- (சீனி அவரை) ரூ. 40, பீா்க்கங்காய்- ரூ. 60, சுரைக்காய்- ரூ. 40, முருங்கை பீன்ஸ்- ரூ. 150, நைஸ் அவரை- ரூ. 120, பெல்ட் அவரை- ரூ. 120, பட்டை அவரை- ரூ. 120, நாட்டு வெங்காயம்- ரூ. 70, ஒட்டு வெங்காயம்- ரூ. 60, பல்லாரி- ரூ. 30, மாங்காய் (கல்லாமை)- ரூ. 20, நாட்டு மாங்காய்- ரூ. 15, நெல்லிக்காய்- ரூ. 50, கருவேப்பிலை- ரூ. 50, மல்லி- ரூ. 50, புதினா- ரூ. 20, இஞ்சி- ரூ. 50, தக்காளி- ரூ. 25-ஆக இருந்தது.

இதுதொடா்பாக மதுரை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகி என். சின்னமாயன் தெரிவித்ததாவது: கத்தரி வெயிலின் காரணமாக அனைத்து வகை காய்களின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. அதேநேரம் சுபமுகூா்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இன்னும் சில நாள்களுக்கு இதே நிலையே தொடரும் என்றாா் அவா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க