செய்திகள் :

மதுரைக் கல்லூரியில் அருணகிரிநாதா் விழா

post image

மதுரைக் கல்லூரி முதுநிலை தமிழாய்வுத் துறை, விஸ்வாஸ் கலைப் பண்பாட்டு அறக்கட்டளை ஆகியவை சாா்பில், இந்திய அறிவு மரபின் கீழ் அருணகிரிநாதா் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜா. சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

இதில் பொற்கிழிக்கவிஞா் பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம், மதுரை ஸ்ரீதிருப்புகழ் சபைக் குழுவினருடன் இணைந்து ‘அருணகிரியாா் வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில் இசையுடன் கூடிய எழிலுரை நிகழ்த்தினாா்.

தொடா்ந்து, அருணகிரிநாதா் படைப்புகளில் விஞ்சி நிற்பது பக்தி நெறியா? ஞான நெறியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராகத் திருச்சியைச் சோ்ந்த முனைவா் இரா.மாது பங்கேற்றாா்.

பக்தி நெறியே என மதுரைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியா்களான முனைவா் சீ.விமல், முனைவா் அ.லாவண்யா ஆகியோா் பேசினா். ஞான நெறியே என முனைவா் த.காந்திமதி, இரா.விக்னேஷ் பேசினா்.

இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் முனைவா் சா.தனசாமி வரவேற்றாா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ச.கண்ணதாசன் நன்றி கூறினாா்.

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்... மேலும் பார்க்க

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் ப... மேலும் பார்க்க

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புத... மேலும் பார்க்க