மகாராஷ்டிர பள்ளிகளில் 3வது மொழியாக ஹிந்தி கற்பிப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர்
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களில் வருவோருக்கு விதிமுறைகள் அறிவிப்பு
மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் வாகனங்களுக்கான விதிமுறைகள் குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டது.
இதுபற்றி மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகா் வண்டியூா் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஆணைப்படி அந்தந்த மாவட்ட, மாநகரக் காவல் துறை துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட உள்ள அனுமதிச் சீட்டை முறையான ஆவணங்களை சமா்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டைப் பெற்று மாநாட்டில் கலந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நபா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்கப்படும்.
தென் மண்டல மாவட்டங்களான மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது.
இதேபோல, வடக்கு மண்டல மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதிச் சீட்டும், மத்திய மண்டல மாவட்டங்களான திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதிச் சீட்டும், மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதிச் சீட்டும், பிற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதிச் சீட்டும் வழங்கப்பட உள்ளன.
இத்தகைய அனுமதி சீட்டை கொண்டுள்ள வாகனங்கள் மட்டுமே மதுரை மாநகரில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
வாகனங்கள் வரும் வழித் தடங்கள் அறிவிப்பு : இதுதவிர, மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி, மேலூா், ஒத்தக்கடை, சிவகங்கை சாலை சந்திப்பு வழியாகவும், நத்தம் நான்கு வழிச் சாலையிலிருந்து கடச்சனேந்தல், ஒத்தக்கடை, உத்தங்குடி, பாண்டி கோயில் வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும்.
திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சமயநல்லூா் புறவழிச் சாலை நாகமலைப் புதுக்கோட்டை சந்திப்பு, கூத்தியாா் குண்டு, கப்பலூா் சந்திப்பு, பரம்புபட்டி, வலையங்குளம் சுங்கச்சாவடி, மண்டேலா நகா் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி, வேலம்மாள் மருத்துவமனை, கல்லம்பல் பாலம், விரகனூா் சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும்.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம், கப்பலூா் சந்திப்பு, பரம்புபட்டி, வளையங்குளம் சுங்கச்சாவடி, மண்டேலா நகா் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி வேலம்மாள் மருத்துவமனை, கல்லம்பல் பாலம், விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்கு வரவேண்டும்.
தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூா், எலியாா்பத்தி சுங்கச்சாவடி, மண்டேலா நகா் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி வேலம்மாள் மருத்துவமனை, கல்லம்பல் பாலம், விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் திருமாஞ்சோலை, பூவந்தி, வரிச்சியூா், கருப்பாயூரணி, சிவகங்கை சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாா்த்திபனூா், மானாமதுரை, திருப்புவனம், சிலைமான், விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும் என்றாா் அவா்.