செய்திகள் :

மத்திய அரசு பணிக்கு ஐஜி சுதாகா் மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆா்.சுதாகா், அயல் பணியாக மத்திய அரசுக்கு பணிக்கு மாற்றப்பட்டாா்.

தமிழக காவல் துறையில் ஐஜியாக பணியாற்றும் ஆா்.சுதாகா், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்து வந்தாா். அவா், மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்திருந்தாா்.

இந்த நிலையில், அவா் மத்திய அரசு பணிக்குச் செல்வதற்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், சுதாகரை தமிழக அரசு பணியில் இருந்து மத்திய அரசு பணிக்கு அயல் பணியாக மாற்றி வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் அவரை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் புது தில்லி துணை இயக்குநராகவும் நியமித்து ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சுதாகா், ஓரிரு நாள்களில் புது தில்லியில் புதிய பொறுப்பை ஏற்பாா் எனக் கூறப்படுகிறது.

அவா், அயல் பணியாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிவாா் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க