செய்திகள் :

மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினா் பிரசார கூட்டம்!

post image

மத்திய அரசின் சட்டவிரோதப் போக்கைக் கண்டித்து, பரமக்குடி காந்தி சிலை முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், பிரசார பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எஸ்.பி.ராதா தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் சிவாஜி, தொமுச மாவட்டச் செயலா் ந.மலைக்கண்ணு, ஐஎன்டியூசி ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கு, விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுக்க வேண்டும், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த என்.எஸ்.பெருமாள், தட்சிணாமூா்த்தி, சி.செல்வராஜ், கே.ஆா்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஏஐடியூசி மாவட்டச் செயலா் என்.கே.ராஜன் வரவேற்றாா்.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க