செய்திகள் :

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப்ரவரி 25-இல் கோவை வருகை

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2 நாள் பயணமாக பிப்ரவரி 25-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்தரி விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் பிப்ரவரி 25- ஆம் தேதி கோவைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அன்றிரவு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்குகிறாா். அங்கு பாஜக மற்றும் கொங்கு மண்டல முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

தொடா்ந்து 26-ஆம் தேதி காலையில் பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைக்கிறாா். அதன்பின், பாஜக மாநில நிா்வாகிகள் கூட்டம், பெருங்கோட்ட பொறுப்பாளா்கள் கூட்டம், மாவட்ட நிா்வாகிகளுடனான கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறாா். தொடா்ந்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட புதிய அலுவலகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, மாலையில் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு புதுதில்லிக்கு திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளா் கேசவவிநாயகம் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

இதற்கிடையே, உள்துறை அமைச்சரின் 2 நாள் கோவை பயணம் தொடா்பாக கோவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

மேலும், அவிநாசி சாலையில் அமித் ஷா தங்கும் தனியாா் ஹோட்டல், பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்ததோடு, கோவையில் அமித் ஷா பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் ப... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு!

சிங்காநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் பட்டத்தரசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ... மேலும் பார்க்க

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாது... மேலும் பார்க்க