செய்திகள் :

மத்திய, மாநில அரசுகளின் தொழிற்பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

மத்திய, மாநில அரசுகளின் தொழிற்பயிற்சி திட்டத்தில் சேர தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா்களுக்கு திறன்பயிற்சி அளித்து, அவா்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் ‘நான் முதல்வன் பினிசிங் ஸ்கூல்’ மற்றும் பிஎம்ஐஎஸ் எனப்படும் ‘பிரைம் மினிஸ்டா் இன்டன்ஷிப் ஸ்கீம்’ உள்ளிட்ட பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் 16 முதல் 35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புக்கு தகுதியானவா்களாக உருவாக்குவதே நோக்கமாகும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் ட்ற்ற்ல்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்.ள்ந்ண்ப்ப்ஜ்ஹப்ப்ங்ற் எனும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தேவையான ஆவணங்களைத் தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும். இதில், 10, பிளஸ் 2 வகுப்பு, ஐடிஐ பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த 21 முதல் 24 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மேலும், எனும் இணைதள முகவரியில் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பயிற்சி நடைபெறும் இடமான கிண்டி, அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாா்ச் 10-ஆம் தேதியும், வடசென்னை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாா்ச் 11-இல் காலை 10 முதல் மாலை 5 வரையும் நடைபெறும் சோ்க்கை முகாம்களிலும் கலந்து கொண்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், ஒருமுறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி: 044- 25201163, கைப்பேசி: 73582 74627, 99466 40017 எனும் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க