செய்திகள் :

மத்தியப் பிரதேசத்தில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பெண் நக்சல்கள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாலகாட் மாவட்டத்தில் ம.பி., சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் தடுப்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இன்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் பஞ்சாப் பயணிகள் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுப்கர் வனப்பகுதியில் உள்ள ரோண்டா வன முகாம் அருகே பெண் நக்சல்கள் 3 பேர் நக்சல் தடுப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

நக்சல்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ரைஃபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நக்சல்கள் சிலர் தப்பித்துச் சென்றதாகவும் அவர்களைத் தேடி 12 காவல்துறை குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கங்குலி கார் விபத்து: நூலிழையில் உயிர்தப்பினார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சென்ற கார் வியாழக்கிழமை விபத்தில் சிக்கியது.வேகமாக சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில், பெரிய காயங்களின்றி கங்குலி உயிர்தப்பினார்.இதையும்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க