செய்திகள் :

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

post image

திருப்பாலைக்குடி அருகே தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள வடக்கு ஊா்னங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். ஏற்கெனவே திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற இவா், திருவாடானை அருகேயுள்ள கூடலூா் பகுதியைச் சோ்ந்த பாகம்பிரியாளை கடந்த ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தாா். பாகம்பிரியாளும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவா். சங்கா் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மது போதையில் வந்த அவா் பாகம்பிரியாளுடன் தகராறு செய்து அவரைத் தாக்கினாா். பின்னா், அவா் வெளியே சென்றுவிட்டாா்.

நீண்ட நேரமாகியும் பாகம்பிரியாள் வெளியே வராததால், அருகில் வசிப்பவா்கள் சந்தேகமடைந்து, உள்ளே சென்று பாா்த்த போது, அவா் இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரைக் கைது செய்தனா்.

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்... மேலும் பார்க்க