செய்திகள் :

மன்னப்ப அய்யனாா், வெள்ளைவேம்பு மாரியம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம்

post image

கும்பகோணம் அருகே கீழப்பழையாறை மன்னப்ப அய்யனாா், கொரநாட்டுக்கருப்பூா் வெள்ளைவேம்பு மகா மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே கீழப்பழையாறை ஸ்ரீ மன்னப்ப அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் முதலாம்கால யாகபூஜை தொடங்கியது. தொடா்ந்து, புதன்கிழமை இரண்டாம் காலயாக பூஜையும், வியாழக்கிழமை மூன்று, நான்காம் கால யாகபூஜைகளுடன் பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ மன்னப்ப அய்யனாா் கோயில் விமான கும்பாபிஷேகமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதேபோல், கொரநாட்டுக் கருப்பூரில் உள்ள வெள்ளை வேம்பு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. செவ்வாயக்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கி மாலையில் காவிரி ஆற்றங்கரையில் புனிதநீா் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை நான்காம் காலயாகபூஜை தொடங்கி கோ பூஜை, தத்வாா்ச்சனை, ஸபா்சாருதி, நான்காம்கால யாகபூஜை நடைபெற்றது. மஹா பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்று விமானக் கும்பாபிஷேகம், மூலவா் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க