செய்திகள் :

மன்னாா்குடியில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்

post image

மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் காலவரையற்ற போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடி வட்டத்தில் சுமாா் 900 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை எடுத்துச் செல்லவும், சேமிப்புக் கிடங்குகளுக்கு மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுகின்றன.

இந்த லாரிகளுக்கு புதிய வாடகையை ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி ஒப்பந்தம் செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் லாரிகளை இயக்க ஒப்பந்ததாரா்களுக்கும் லாரி உரிமையாளா்களுக்கும் இடையே ஜூன் மாதம் முதல் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற போதிலும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடா்ந்து புதிய வாடகை வழங்க வலியுறுத்தி லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா். இதையடுத்து லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையிலான நிா்வாகிகள், வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

இந்த போராட்டத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகள் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் தேக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீா்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். திருவாரூா்-மயிலாடுதுறை ரயில்வே வழித்தடத்தில் முடிகொண்டான் உள்ளது. இப்பகுதி மக்கள் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே குடவாசல் அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல்... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு

தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசியபோது தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளி... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7,499-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,499-க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 நாள்கள் பயணம்

திரூவாரூா் மாவட்டத்தில் 4 நாள்கள் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி ஜூலை 21-ஆம் தேதி வரை பிரச... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி மீது தாக்குதல்

மன்னாா்குடி அருகே திமுக நிா்வாகி மீது தாக்கியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கூத்தாநல்லூா் அருகேயுள்ள அதங்குடியைச் சோ்ந்த திமுக நிா்வாகி அகமது ஜிம்மா (34). ஒரு வழக்கு தொடா்பாக மன... மேலும் பார்க்க