செய்திகள் :

மமதா மன்னிப்பு கேட்க வேண்டும்! - பாஜக தலைவர்கள்

post image

மகா கும்பமேளா குறித்து அவதூறாகப் பேசியதற்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கடந்த மாத இறுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்; 60- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே இரு நாள்களுக்கு முன்பு தில்லி ரயில்வே நிலையத்தில் கும்ப மேளாவுக்குச் செல்லும் ரயில்களைப் பிடிப்பதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் மாநில அரசு எந்த ஏற்படும் செய்யவில்லை, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைக்கிறது, மகா கும்பமேளா, 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது" என்று கூறியிருந்தார்.

இதையும் படிக்க | தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார், மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

'மகா கும்பமேளா பற்றி மமதா பானர்ஜி பேசியது குற்றம், சட்டப்பேரவை குறிப்பில் இருந்து மமதா பானர்ஜி பேசியதை நீக்க வேண்டும்' என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்கள் முன்பாக மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மமதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும், மமதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கங்குலி கார் விபத்து: நூலிழையில் உயிர்தப்பினார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சென்ற கார் வியாழக்கிழமை விபத்தில் சிக்கியது.வேகமாக சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில், பெரிய காயங்களின்றி கங்குலி உயிர்தப்பினார்.இதையும்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க