செய்திகள் :

மருதமலை மலைப் பாதையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு!

post image

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா பணிகள் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் வாகனங்களில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் ஏப். 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால், திருக்குடமுழுக்கு பணிகள் விரைவாக முடிக்க வேண்டிய காரணத்தினால் 20.02.2025 முதல் 06.04.2025 வரை மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.

இதையும் படிக்க: ஃபென்ஜால் புயல்: விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!

மேலும் 20.022025 முதல் 06.04.2025 வரையுள்ள செவ்வாய்கிழமை, ஞாயிற்றுகிழமை. கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இரண்டு சக்கர வாகனங்கள் மலைமேல் செல்ல அனுமதியில்லை.

பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமிதரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை : திரைப்பட இயக்குநர் எஸ். ஷங்கரின் சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன. ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்க... மேலும் பார்க்க

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால... மேலும் பார்க்க

திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அ... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சாலைகள், தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர்... மேலும் பார்க்க

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயார்: அண்ணாமலை

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு பதில் சவால் விடுத்துள்ளார்.அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

அய்யாசாமி வைகுண்ட பெருமாள் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க