செய்திகள் :

மருத்துவ இதழியல் படிப்பு: விண்ணப்ப அவகாசம் மே 31-இல் நிறைவு

post image

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அவகாசம் வரும் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்பானது ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இதழியல் துறையில் அனுபவம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

அப்படிப்பின் கீழ், மொத்தம் 3 தாள்களுக்கான தோ்வு முறை உள்ளது. அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சாா் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் இணையதள முகவரியிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

இப்படிப்பில் தினந்தோறும் வகுப்புகள் கிடையாது. மாறாக, நேரடி வகுப்புகள் மாதம் இரு முறை நடத்தப்படும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க