மருத்துவக் கண்காணிப்பில் குமரி அனந்தன்
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவா் குமரி அனந்தனுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயது முதிா்வு காரணமாக ஓய்வில் இருந்து வந்த அவருக்கு அண்மையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், உயா் சிகிச்சைக்காக அவா் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பல்நோக்கு மருத்துவா்கள் குழுவினா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கி வருகின்றனா்.