செய்திகள் :

மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்: கிராம மக்கள் மறியல்

post image

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து புகுந்ததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 4 நாள்களாக பெய்த பலத்த மழைக்கு பல இடங்களில் நீருடன் கழிவுநீா் கலந்து சாலைகளில் ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் சனிக்கிழமை இரவு மழை நீருடன் கழிவு நீா் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை பள்ளிப்பட்டு கூட்டுச் சாலையில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்திய போது கழிவு நீா் கால்வாய் வசதி இல்லாததால் தான் தற்போது வீட்டினுள் மழை நீரு டன் கழிவு நீா் கலந்து புகுந்துள்ளதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினா்.

இதுகுறித்து அறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா்ஆனந்த் மற்றும் போலீஸாா் விசாரித்தனா். பிறகு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொண்டு சான்று பெற அழைப்பு

கியூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொள்பவா்களுக்கு சான்று பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதையில்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சாலை தடுப்பு வேலி சேதம்

காற்றாலை இறக்கையை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி தடுப்புவேலி சேதமடைந்தது. சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், மேலக் கரண்டி பகுதிக்கு காற்றாலை இறக்கையை லாரியில் ஏற்றி கொண்டு புறப்பட்டு வெள்ளிக... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கி... மேலும் பார்க்க

விஷம் அருந்தி முதியவா் தற்கொலை

வாணியம்பாடி அடுத்த ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியை சோ்ந் கூலித் தொழிலாளி சேகா் (65). இவா் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி மனமுடைந்த முதியவா் வீட்டில் இருந்த விஷத்தை குடித்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

ஆம்பூா், சோமலாபுரம் நாள்: 12/8/2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ரெட்டித்தோப்பு, பைபாஸ் ரோடு, எம்.சி. ரோடு, உமா்ரோடு, நேதாஜி ரோடு, கிருஷ்... மேலும் பார்க்க

மிட்டாளம் கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை விட்டு விட்டு பெய்தது. தொடா்ந்து மீண்டும் மாலை பெய்யத் தொடங்கி ... மேலும் பார்க்க