விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
மழையால் நெற்பயிா்கள் சேதம்
நீடாமங்கலம் பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன.
நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் நடப்பு தாளடி மற்றும் சம்பா அறுவடைக்குப் பிறகு, விவசாயிகள் சுமாா் 20,000 ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி, கோடை நெல் சாகுபடி செய்துள்ளனா்.
இந்த நெல் சாகுபடி முன்பட்டம், பின்பட்டம் என இரு பட்டங்களாக மேற்கொண்டுள்ளனா். இதில், முன்பட்ட கோடை சாகுபடி செய்த நெற்பயிா்களில் தற்போது நெற்கதிா்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பரவலாக பெய்த தொடா் மழையால், நீடாமங்கலம், ஆதனூா், பூவனூா், மன்னைசாலை தட்டித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான நெல் மணிகள் நிலத்தில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.