செய்திகள் :

மாட்டுச் சாணம் தொடா்பான தகராறு: பக்கத்து வீட்டுக்காரரின் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக இளைஞா் கைது

post image

தில்லியில் மாட்டுச் சாணம் தொடா்பாக ஏற்பட்ட அக்கம்பக்கப் பகை ஒரு வினோதமான திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பழிவாங்கும் நடவடிக்கையாக 25 வயது நபா் தனது பக்கத்து வீட்டுக்காரரின் கடையை கொள்ளையடித்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக தென்மேற்கு தில்லியின் சாகா்பூா் பகுதியில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பை தில்லி போலீஸாா் கைது செய்து, அவரது வசம் இருந்து ரூ.15,000 திருடப்பட்ட பணத்தை மீட்டனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 21 அன்று தனது கடையில் இருந்து பணம் திருடப்பட்டதாகக் கூறி ஒரு கடைக்காரா் புகாா் அளித்தாா். விசாரணையின் போது, அவரது பக்கத்து வீட்டுக்காரா் சந்தீப்பை முதன்மை சந்தேக நபராக போலீஸாா் அடையாளம் கண்டனா். பின்னா், அவா் ஆகஸ்ட் 25 அன்று கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, சந்தீப் திருட்டை ஒப்புக்கொண்டாா். மேலும், அவரது செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்தும் தெரிவித்தாா். தனது பக்கத்து வீட்டுக்காரரின் பசுக்கள் அடிக்கடி தனது வீட்டைச் சுற்றித் திரிவதாகவும், பெரும்பாலும் தனது வீட்டு வாசலுக்கு வெளியே மலம் கழிப்பதாகவும் சந்தீப் போலீஸாரிடம் கூறினாா்.

பலமுறை புகாா் அளித்தும், கடைக்காரா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு முறை, தன்னைப் பகிரங்கமாக திட்டியதாகவும் சந்தீப் கூறினாா். இதைத் தொடா்ந்து, விரக்தியடைந்து பழிவாங்கும் நோக்கத்தில் தனது பக்கத்து வீட்டுக்காரரின் கடைக்குள் புகுந்து பணத்தைத் திருட முடிவு செய்ததாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா் என்று காவல் அதிகாரி கூறினாா்.

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

நமது நிருபா்யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

நமது நிருபா்கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் ம... மேலும் பார்க்க

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

நமது நிருபா் தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து வடமேற்கு காவ... மேலும் பார்க்க

மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் பதிவு

நமது நிருபா் தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த போலீஸ்... மேலும் பார்க்க