செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு ரூ. 7.85 லட்சம் கல்வி நிதியுதவி

post image

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவியை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், ஒவ்வொரு ஆண்டும் ஏழை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கி வருகிறாா். நிகழ்கல்வி ஆண்டிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆராய்ந்ததில் 75 பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சுமாா் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை வழங்கப்பட்டது. மாணவா்கள், அவா்களின் பெற்றோா்களிடம் அதற்கான காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து எம்.பி. வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளா் வழக்குரைஞா் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், மாநகர இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் டைசன், மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தி... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொட... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா். நித்... மேலும் பார்க்க