செய்திகள் :

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில்

post image
கடந்த 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட் மற்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கடுத்து சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 17) சட்டப் பேரவை நடைபெற்று வருகிறது. ஆளும் தி.மு.க, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடுவதில்லை என்றும்,

அப்பாவு

உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கே பேசுவதாகவும், தொலைக்காட்சியில் தாங்கள் பேசுவதை நேரலை செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது அதிமுக. அதில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்து அப்பாவு சபாநாயகராகத் தொடர்கிறார்.

இதையடித்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 'கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஏன் மடிக்கணினி வழங்கவில்லை' என்ற கேள்வியை முன்வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், "மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டுத்தான் சென்றீர்கள். அந்த திட்டத்தை சரிசெய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாகத் தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் எவ்வளவு மடிக்கணினி வழங்கப்பட்டது என்பதற்கானப் புள்ளி விவரங்கள் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

விழுப்புரம்: ஆசிரியை அடித்ததால் மயங்கி விழுந்த மாணவர்; 2 ஆசிரியைகள் மீது நடவடிக்கை.. நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளியை முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

``சரியாகப் படிக்கவில்லை..'' - வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவர் பொதுத்துறைப் பிரிவில் கணக்காளராகப் பணிபுரிகிறார். மார்ச் 14 அன்று குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பிறக... மேலும் பார்க்க

TNBudget 2025: 'பட்ஜெட்டில் 'ரூ' மாற்றம் எதற்கு?'- முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது.தமிழ்ப்பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ... மேலும் பார்க்க

அடையாறு சீரமைப்பு: `மீண்டும் ரூ.1500 கோடி' - ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி; என்னதான் நடக்கிறது?

மனித வரலாற்றில் ஒவ்வொரு நதியுமே ஒவ்வொரு கலாசாரத்தின் தோற்றுவாயாகச் செயல்படுகிறது. நதிக்கும் மனித மரபுகளுக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. அப்படிப்பட்ட ஒரு நதிதான் சென்னையின் அடையாளமான அடையாறு. இன்றை... மேலும் பார்க்க

`ஸ்டாலினாலும் வைகோவாலும் நான் இழந்தது நிறைய..!' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஓப்பன் டாக்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்திலிருப்பவர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி.,என எந்தப் பதவியையும் வகித்ததில்லை. ”வேற ஒருத்தனாஇருந்தா இந்நேரத்துக... மேலும் பார்க்க

'ஏஐ தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் சீனா' - இந்தியாவின் நிலை என்ன?

சமீபத்தில் டீப்சீக் என்ற நுண்ணறிவு செயலியை சீனா அறிமுகம் செய்தது. இது சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதற்கு அதுவரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா மட்ட... மேலும் பார்க்க