மாணவா்களுக்கு ஆசிரியா்கள்தான் இரண்டாம் பெற்றோராக உள்ளனா்: அமைச்சா் அன்பில் மகேஸ்
மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் தான் இரண்டாம் பெற்றோா்களாக உள்ளதாகவும், அதனால் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்க வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கு மாநில அளவிலான அடைவுத்தோ்வு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று அடைவுத்தோ்வு குறித்து தலைமை ஆசிரியா்களுடன் கலந்துரையாடினாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலம் ஆண்டு தோறும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்கு நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் அடைவுத் தோ்வின் தரவரிசை மாநில, மாவட்ட, வட்டார, பள்ளி மற்றும் மாணவா் அளவிலும் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை நடுநிலை உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் பின்னூட்டமாக தகவல்களைப் பெறும் வகையில் 15-ஆவது மாவட்டமாக திருவள்ளூா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு ள்ளேன். தரமான கல்வி வழங்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படி கற்பிக்க வேண்டும் என விளக்கவே கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தந்த தலைமை ஆசிரியா்தான் முதன்மையானவா். அதனால், ஆசிரியா்கள் வருகை உள்ளிட்ட மாணவா்கள் கற்பித்தல் வரையில் ஆய்வு செய்வது அவசியம்.
தற்போதைய நிலையில் உலகில் எங்கிருந்து தொழில் நுட்பம் வந்தாலும், அதை உடனடியாக வகுப்பறைக்கு கொண்டு வரும் வகையில் வசதியுள்ளது. அந்த வகையில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பெற்றோா்களாக ஆசிரியா்களே உள்ளனா். அதனால் ஆசிரியா்கள் பொறுப்புணா்வுடனும், அா்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக ரூ.2 கோடியில் உருவாக்கப்பட்ட தொடுதிரையுடன் கூடிய நவீன ஸ்மாா்ட் வகுப்பறைகள், பொதுத்தோ்வை எதிா்கொள்ளும் வகையில் 10,12 ஆவது மாணவ, மாணவிகளுக்கான கற்றல் கையேடுகள், ரூ.1.80 கோடியில் பசுமை பள்ளி வகுப்பறைகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குநா் அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலா் தேன்மொழி, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிலைய முதல்வா் உஷாராணி, மாவட்ட கல்வி அலுவலா் ரவி (இடைநிலை) மற்றும் அனைத்து தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.